இந்திய நாட்டின் உயரிய பதவிகளான குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்களை எதிர்கட்சியினர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்,அத்தகைய பதவிகளில் வகிப்போர்கள் மீது அவதூறான வார்த்தைகளைப் தயவுசெய்து பேச வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.மேலும் கூறிய அவர், குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற உயர் பதவிகளை வகிப்போர்கள் ஒன்றும் தனிநபர்கள் அல்ல என்றும் அவர்கள் கோடிக்கணக்கான இந்திய மக்களின் பிரதிநிதிகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறிய அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் எந்த ஒரு பிரதமர் மீதும் நான் வசை பாடியது கிடையாது, அவதூறான வார்த்தைகளில் பேசியதும் கிடையாது என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.இந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தனிநபர் தாக்குதல் அதிகரித்தே காணப்பட்டது.அண்மையில் பிரதமர் மோடி மீது முண்ணனி தேசிய கட்சிகளான காங்கிரஸ், திரிணாமூல், ஆம் ஆத்மி கட்சியினர் மிகுந்த விரும்பத்தகாத சொற்களில் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற ஜனநாயக அடையாளங்களை அரசியல் கட்சிகள் அழித்துவிடக்கூடாது என்றும் கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Realme C65 5G : பட்ஜெட் விலையில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், ரியல்மி (Realme) நிறுவனம் அதன் சி-சீரிஸின் புதிய ஸ்மார்ட் போனான ரியல்மி C65…
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…