நாளை அரசு & தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை …!புதுச்சேரி பள்ளி கல்வி இயக்குனர் அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு & தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரியில் அரசு & தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை என்று  பள்ளி கல்வி இயக்குனர் ருத்ர கவுடு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும்.வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும்.மீனவர்கள் தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment