#BREAKING: நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று 08:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை திருச்செந்தூரில் 18 செ.மீ மழையும் , தூத்துக்குடியில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு வகை எச்சரிக்கை தற்போது சிவப்பு வகை எச்சரிக்கையாக மாற்றப்பட்டது. தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை, தென்காசிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடியில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan