கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம்:அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயார்…!

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று ரத்தம்:அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயார்…!

கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில்  அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊழியர்கள் செலுத்தினார்கள்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *