ஐபிஎல் போட்டிக்கு தயாராகி மும்பை செல்லும் ஹிட்மேன்..!

ஐபிஎல் போட்டிக்கு தயாராகி மும்பை செல்லும் ஹிட்மேன்..!

ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய்க்கு விமானம் பிடிக்க விமான நிலையத்தை நோக்கி செல்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்ததை தொடர்ந்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியை தாற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிசிசிஐ இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்தது.

அதன்படி போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் தொடர்பான நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

மேலும் கூட்டத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் எனவும், செப்டம்பர் 19 ஆம் தேதி ஐபிஎல் முதல் போட்டி தொடங்கும் எனவும் மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டிக்காக அணைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீட்டிலே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள், அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துபாய்க்கு விமானம் பிடிக்க விமான நிலையத்தை நோக்கி செல்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Me running towards the airport to catch a plane for Dubai #IPL2020

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube