மார்ச் 22- இன்று தமிழ் திரைப்படத்துறையில் காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நினைவு நாள்…!!

மார்ச் 22- இன்று
தமிழ் திரைப்படத்துறையில் காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் நினைவு நாள். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலககட்டத்தில், தன்னுடைய அழகிய தோற்றத்தாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன் ஆவார்.. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழிகளிலும் நடித்துள்ள அவர், சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம ஸ்ரீ’ விருது மற்றும் அவர் உருவம் பதித்த தபால் தலையையும் வெளியிட்டு கௌரவிக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் தான் ஏற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி, தமிழ் திரையுலக ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் ஜெமினி கணேசன்.

இவருக்கு மூன்று மனைவிகள்:

ஹிந்தி லேடி சூப்பர்ஸ்டாரான நடிகை ரேகா இவரது முதல் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment