வைகோ, திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!

வைகோ, திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!

வைகோ, திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த 2016-ம் ஆண்டு எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் வைகோ, திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி வைகோ மற்றும் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வைகோ மற்றும்  திருமாவளவன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி வழக்கை நீதிபதி நிர்மல்குமார் ரத்து செய்து உத்தரவிட்டார்.

author avatar
murugan
Join our channel google news Youtube