தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு..!

ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்களை அனுமதிப்பதில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது.?  என்பது குறித்து வருகின்ற அக்டோபர் 5-ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும்  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரடங்கில்  வழங்கப்பட்ட தளர்வுகளை சுட்டிக்காட்டி நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan