முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமின் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு.

அல்-காதர் அறக்கட்டளை நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் வளாகத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் கைதை தொடர்ந்து பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று கூறிய, இம்ரான் கானை ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

அதன்படி, சிறப்பு படை இம்ரான் கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது, சிறையில் இருந்து உடனடியாக இம்ரான் கானை விடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுள்ளார் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்