கொரோனா நிதியுதவி…. ஹீரோ நிறுவனம் 100 கோடி ரூபாய் நிதியுதவி என அறிவிப்பு…

கொரோனா வைரஸ் அகில  உலகையும் அதிகமாகவே  பாதித்து வருகிறது. இந்நிலையில், கொரோனோ தடுப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டுமக்களை கேட்டுக்கொண்டார். இதனால்  பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது  ஹீரோ  வாகன நிறுவனம்  ரூ. 100 கோடி நிதியுதவி அளிப்பதாக  அறிவித்துள்ளது. இதில் ரூ. 50 கோடி ரூபாய் பிரதமர் நிவாரண நிதிக்கும்,  மீதமுள்ள ரூ. 50 கோடி ரூபாய் மற்ற மீட்பு பணிகளுக்கு செலவிடப்பட இருப்பதாக ஹீரோ குழுமம் அறிவித்துள்ளது. 
 
author avatar
Kaliraj