கோப்ரா திரைப்படம் என்னதான் ஆச்சு.? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

கடந்த 2020-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி நிறுத்தி படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வந்தது. அதன் பின் இறுதியாக இந்த வருடம் ஆரம்பத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. ஆனால் படத்திலிருந்து கடந்த ஆண்டு வெளியான டிரைலரை தொடர்ந்து எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் அனைவரும் கோப்ரா படம் என்னதான் ஆச்சு என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் கோப்ரா திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்  இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வரும் ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியீட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.