ஹெல்மேட் போடலயா நடுரோட்டில் தடுத்து நிறுத்தாதீங்க..!முதல்வர் கிடுக்குப்பிடி

ஹெல்மெட் அணியாத வாகனஒட்டிகளை நடுரோட்டில் தடுத்து நிறுத்த வேண்டாம் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா போக்குவரத்து காவல் துறையினருக்கு அம்மாநில முதல்வர் ஒரு உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.
ஹெல்மெட் அணியாத வாகனஒட்டிகளை நடுரோட்டில் தடுத்து நிறுத்த வேண்டாம் மேலும் சட்ட விதிகளை மீறுவோரை நாம் சி.சி.டி.வி. கேமரா கொண்டு  எளிதாக   கண்டறிந்து சட்டத்தை மீறியவர்களின்  வீட்துக்கு சல்லான்களை அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார்.மேலும் இதற்கான இ-செல்லான் உருவாக்கி அதனை அவரவர் வீடுட்டுக்கு அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் இவ்வாறு விதிகளை தொடர்ந்து மீறுபவர்கள் மீது அதிக தொகை அபராதமாக விதிக்கப்படும். அபராதம் செலுத்த தவருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்என்று போக்குவரத்து காவலுக்கு அறிவுறுத்தியும் உள்ளார் .
author avatar
kavitha