உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அணைத்து அணி வீரர்களும் அமீரகத்திற்கு செல்லுகின்றனர் இந்நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் வீரர்கள் அமீரகத்திற்கு சென்னையில் இருந்து புறப்பட்டனர்.
இந்நிலையில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் Hello Dubai என்று பதிவு செய்துள்ளார், ஆம் விராட் கோலி ஐபிஎல் போட்டிக்காக அமீரகம் வந்துவிட்டார்.