படுக்கைக்கு அழைத்த வாரிசு தயாரிப்பாளர்.! வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்து அதிதிராவ் ஹைத்ரி.!

வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்து கருத்து தெரிவித்த அதிதி ராவ் தன்னை வாரிசு தயாரிப்பாளர்களில் ஒருவர் படுக்கைக்கு அழைத்தாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை உட்பட செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், இந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளவர் அதிதிராவ். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘சுஃபியும் சுஜாதயும் ‘என்ற மலையாள திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், துக்ளக் தர்பார், ஏய் சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இவர் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்தும், மீ டூவில் புகார் செய்யும் நடிகைகளை குறித்தும் கூறியுள்ளார்.

அதில் திரையுலகில் ஒவ்வொருவரும் பிரச்சினைகளையும், மிரட்டல்களையும் எதிர் கொள்கின்றனர். சிலர் தப்பியும், அப்பாவி நடிகைகள் சிலர் சிக்கியும் கொள்கிறார். எனது அதிர்ஷ்டம், நான் சிக்காமல் தப்பித்து விட்டேன். மேலும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் கூறிய அவர்,நான் சினிமாவில் அறிமுகமான நேரத்தில் வாரிசு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் அதிகம் என்றும், வாரிசு தயாரிப்பாளர்களில் ஒருவர் படுக்கையை பகிர்ந்தால் தான் சினிமாவில் வாய்ப்பு என்றும், இல்லையென்றால் சினிமா கனவை மறந்து விடு என்று கூறியதாகவும், ஆனால் நான் அதற்கு ஒப்பு கொள்ளமால் வேறு படத்தில் அறிமுகமாகினேன் என்று தெரிவித்துள்ளார். நான் நடித்த படங்களை பார்த்தவர்கள் சிறப்பாக நடித்தாய் என்று கூறி விட்டு விடுவார்கள். இதுவே வாரிசு நடிகர் படம் என்றால் உங்கள் நடிப்பு சினிமா சரித்திரத்திலையே சிறந்த நடிப்பு என்று கூறி புகழ்வார்கள் என்று தெரிவித்துள்ளார்