அசாமில் கனமழை : 8 பேர் பலி , 20,000 பேர் பாதிப்பு …!

அசாமில் கனமழை : 8 பேர் பலி , 20,000 பேர் பாதிப்பு …!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் அசாமில் கடந்த 48 மணிநேரத்தில் கடுமையான புயலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

இந்த கனமழை காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கிட்டத்தட்ட 592 கிராமத்திலுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube