தமிழகத்தில் 8 இடங்களில் அதீதகனமழை- வானிலை ஆய்வு மையம்..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 8 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. ஒரு இடத்தில் 20 செ.மீ மேல் மழை பெய்தால் அதை அதீதகனமழை என கூறப்படுகிறது. அதன்படி, குறிஞ்சிப்பாடி – 25 செ.மீ, திருத்துறைப்பூண்டி – 22 செ.மீ, சீர்காழியில் 21 செ.மீ, குடவாசல் – 21 செ.மீ, கொள்ளிடம் – 36 செ.மீ , சிதம்பரம் – 34 செ.மீ , பரங்கிப்பேட்டை – 26 செ.மீ, மணல்மேடு – 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

author avatar
murugan