பீகாரில் கனமழை வெள்ளம்..!-43 பேர் பலி..!

பீகாரில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வெள்ளத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரடியாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று பார்வையிட்டுள்ளார்.