கனமழையால் அர்ஜெண்டினா ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

கனமழையால் அர்ஜெண்டினா ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

தொடர் கனமழையால் அர்ஜெண்டினாவில்,  வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டின் வடமேற்கு பகுதியான சால்டா, வெள்ள நீரில் மிதந்து கொண்டிருக்கிறது. வெள்ளநீரில் தத்தளித்த மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பெருக்கெடுத்து ஓடி வரும் வெள்ளத்தில், கார்கள், வீடுகள், மரங்களை, கட்டைகள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன…

Image result for argentina salta Pilcomayo heavy rain 2018

பில்கோமாயோ ((Pilcomayo)) ஆற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆற்றின் கரைகளை ஒட்டி வசித்து வந்த 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *