கனமழை எச்சரிக்கை – எந்தெந்த மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை?.

கனமழை எச்சரிக்கை காரணமாக மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நீலகிரி, திருச்சி,  திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தருமபுரி, திருவண்ணாமலை,கோவை, திண்டுக்கல்,தேனி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Aravinth Paraman

Leave a Comment