#BREAKING: 4 மாவட்டங்களில் கனமழை.. 9 மாவட்டங்களில் மிதமான மழை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

#BREAKING: 4 மாவட்டங்களில் கனமழை.. 9 மாவட்டங்களில் மிதமான மழை..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தற்போது வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ள புரேவி புயல் நாளை அதிகாலை பாம்பன் -கன்னியாகுமரியை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரியலூர் நாகை தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube