தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்,நேற்று ஒரேநாளில் 34,867 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.எனவே,கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,77,211 ஆக அதிகரித்துள்ளது.மேலும்,நேற்று ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்த நிலையில்,கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,872ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து,அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,”தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றினால் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய,இன்னும் இரண்டு நாட்களில் 10 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்படும்.
மேலும்,”தமிழகத்தில் 10 நாட்களுக்கு முன்பு இக்கட்டான சூழ்நிலை இருந்தது.ஆனால்,முதல்வர் எடுத்த நடவடிக்கைகளால் தற்போது ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.அதுமட்டுமல்லாமல்,ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. மேலும்,கடந்த நான்கு நாட்களில் கொரோனா பாதிப்பு குறைவாகவே பதிவாகியுள்ளது.
அதனால்,தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மறைக்கவில்லை”,என்று கூறினார்.
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…
Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…
Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3…