தண்ணீர் பிடிக்க சென்ற இடத்தில் தலைவெட்டு!திடுக்கிடும் தகவல்!

இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பை மாநகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு பொதுக்குழாயில் மக்கள் அனைவரும் தண்ணீர் பிடிப்பது வழக்கம். அப்போது ஒரு குடும்பத்தை சேர்ந்த அன்னியும் அவருடைய கணவரின் தம்பியும் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்படியே அது பெரிய தகராறாக மாறியுள்ளது.கொஞ்சநேரத்தில் தண்ணீர் பிடிக்க விட மாட்டேன் என்று அண்ணி கூறியுள்ளார். அது பெரிய சண்டையாகியுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி அண்ணனின் மனைவி என்று பாராமல் அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார்.தன் மனைவியை கொன்றதற்காக அண்ணன்,தம்பி மீது காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மக்களிடையே நிலவும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மஹாராஷ்ட்ரா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.