31.1 C
Chennai
Monday, May 29, 2023

மக்களவை தேர்தல் முடிந்த பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு – மத்திய அரசு முடிவு

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்த பிறகே, இந்தியாவில்...

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

வெயில் காலத்தில் தலைவலியா..? கவலையை விடுங்க… இந்த ‘தர்பூசணி’ ஜூஸை குடியுங்கள்..!!

கோடைக்காலம் தொடங்கிவிட்டால் மக்கள் வெளியே வெயிலில் செல்ல சற்று அச்சபடுகிறார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கும். கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது.

Watermelon juice
Watermelon juice [Image source : wallpaperflare]

மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக தலைவலி போன்றவற்றை பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். நீரிழப்பு என்பது தலைவலிக்கு ஒரு பொதுவான காரணமாகும், எனவே தண்ணீர் குடிப்பது அல்லது தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு காரணமாக ஏற்படும் தலைவலியைத் தடுக்க அல்லது குறைக்க உதவும்.

watermelon juice
watermelon juice [Image source : pinterest]

தர்பூசணியில் அமினோ அமிலம் சிட்ருலின் உள்ளது, இது இரத்த நாளங்களைத் தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது, தலைவலியை குறைக்க உதவுகிறது. தர்பூசணி சாறு அனைத்து வகையான தலைவலிகளுக்கும் மருந்தாக இல்லாவிட்டாலும், இது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீரேற்றம் செய்யும் சிற்றுண்டியாக இருக்கலாம் என உணவியல் நிபுணர் ஃபௌசியா அன்சாரி தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.

தர்பூசணியின் சத்துக்கள்

  • 90 சதவீதம் தண்ணீர் சத்து நிறைந்துள்ளது.
  • ஒவ்வொரு பானத்திலும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி6 உள்ளது.
  • அமினோ அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் லைபோசீன் ஆகியவை ஏராளமாக உள்ளது.
  • பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.
  • இதில் உப்பு மற்றும் கலோரிகள் குறைவு.

வெயில் காலத்தில் தர்பூசணி ஜூஸ் 

watermelon juice
watermelon juice [Image source : pinterest]

இந்த வெயில் காலத்தில் தலைவலி ஏற்பட்டால் கவலையை விட்டுவிட்டு தர்பூசணி வாங்கி அதனை ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் தலைவலியை குறைத்துகொள்ளலாம். தர்பூசணி சாறு ஒருவரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் சருமத்தை நீரேற்றமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.