ஒவ்வொரு நாளும் ஓயாமல் உழைக்கிறார் – முதல்வரை புகழ்ந்து எம்.எல்.ஏ ஆளூர் ஷ நவாஸ் ட்வீட்

முதல்வரின் இந்த செயலை பாராட்டி நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷ நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  மேற்கொண்டு வருகிறார்.

முதல்வரின் இந்த செயலை பாராட்டி நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷ நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். முன்பதிவில், ‘நேற்று முன்தினம் நாகப்பட்டினம் வந்தார். நேற்று சென்னையில் சுழன்றார். இன்று கன்னியாகுமரி விரைந்தார். 6 மாதத்தில் 5 மாதம் கொரோனா ஒழிப்பில் கழிந்தது. மீதம் மழை வெள்ளத்தில் கரைந்தது. இடரை எதிர்கொண்டு எழுகிறார். ஒவ்வொரு நாளும் ஓயாமல் உழைக்கிறார். களத்தில் நின்று மக்களை காக்கிறார்.’ என பதிவிட்டுள்ளார்.