கோபத்துடன் மைதானத்திற்குள் தோனி வந்தது எதற்காக?: சரியான காரணம் கூறிய பயிற்சியாளர் பிளமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதியில் சென்னை அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. ஆனால் கடைசியாக ஒவரில் பல அமளி துமளி நடைபெற்றது. தவறான முடிவு கொடுத்த நடுவர்கள் ஆட்டத்தையே குழப்பிவிட்டனர்.

இதன் காரணமாக மைதானத்திற்குள் விருவிருவென வந்த தோனி, நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். தற்போது இது எதற்காக என்று விளக்கம் கொடுத்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்…

இதுகுறித்து அவர் கூறியதாவது…

தோனி மைதானத்திற்குள் சரியான காரணத்திற்காகவே வந்தார். நோ பால் கொடுத்துவிட்டு பின்னர் எதற்காக அந்த முடிவினை மாற்றி அமைத்தார்கள் என்று தெரியவில்லை . அது எதற்காக என்று கேட்கத்தான் அவர் உள்ளே வந்தார். மேலும் நடுவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளமிங்.

author avatar
Srimahath

Leave a Comment