ஹத்ரஸ் குற்றவாளிகள் பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் – பா.ஜ.க எம்.பி!

ஹத்ரஸ் குற்றவாளிகள் பொதுமக்கள் முன்னிலையில் கொல்லப்பட வேண்டும் என வங்காளத்தின் பா.ஜ.க எம்.பி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹட்ரஸ் எனும் கிராமத்தில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு ஆண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் முதுகெலும்பு உடைந்த அப்பெண் 14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும்கண்டனத்தை பெற்றிருந்தது.

பல்வேறு அரசியல் வாதிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றவாளிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், வங்காளத்தின் பாஜக எம்பி அரசியல் சட்டர்ஜி அவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொடூரமாக அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் கொண்டு வந்து சந்தியில் வைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அவர்களுக்கு எந்தவிதமான கருணையும் காட்ட கூடாது என கூறியுள்ளார்.

author avatar
Rebekal