ஹர்திக், ராகுலை ஆட விடுங்கப்பா..!! பிசிசிஐ தலைவர் பேச்சு!

சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய சர்ச்சையின் காரணமாக ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களை மீண்டும் ஆட வைக்க வேண்டும் எனவும் அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். ஆனால் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி ஆகி விடக்கூடாதுஎன பிசிசிஐயின் நிர்வாக தலைவர் சிகே கன்னா கூறியுள்ளார்

ஆனால் பிசிசிஐ அவர்களை தடை செய்தது என்பது என்ன தெரியுமா? உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றனர் .அதன் ஒரு படியாக இது நடந்து வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ தலைவர் இப்படி பேசியுள்ளது இருவருக்கும் ஆறுதல் அளித்து உள்ளது.

author avatar
Srimahath

Leave a Comment