ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் சிறந்த கேப்டனாக இருக்கிறார் -இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடர் பத்தாவது போட்டியில், டெல்லி கேப்பிடல் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது.

இந்நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்  கிரேம் ஸ்வான் பேசியுள்ளார்.

அப்பொழுது பேசிய அவர், ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை போன்றவர். இருந்தாலும் அவர் அதை நன்றாக செய்கிறார். அவருடைய கையில் கேப்டன்சி கொடுத்த பின்பு நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

ஏனென்றால், அவருக்கு ஒரு ஆளுமை தன்மையும் உள்ளது மற்றும் தானே தனது குழுவை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். மேலும் அமைதியாக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal