சமீப காலமாக பட வாய்ப்பில்லாமல் மார்கெட் இழந்திருக்கும் தமிழகத்தின் அடுத்த குஷ்பு என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா, தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’,அதேபோல் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவுடன் ஒரு படம் என அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகாவிடம் முன்பு மேனேஜராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவர் ஹன்சிகா மீது, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இதுவரை தான் நடிகை ஹன்சிகாவுடன் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதைப் பெற்றுத் தரும்படியும் அவர் அளித்திருக்கும் புகார் மனுவில் கூறியுள்ளார் முனுசாமி.