விஏஓக்களுக்கு கைத்துப்பாக்கி – முதல்வருக்கு விஏஓ சங்கத்தின் சார்பில் கடிதம்!

விஏஓக்களுக்கு கைத்துப்பாக்கி – முதல்வருக்கு விஏஓ சங்கத்தின் சார்பில் கடிதம்!

mk stalin

கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் தமிழக முதல்வருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை.

தமிழ்நாட்டில் நேர்மையான விஏஓக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்புக்காக தமிழக அரசு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, விஏஓ சங்கத்தின் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பு பயிற்சியளித்து கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி முறப்பாடு கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தலை தடுத்ததால் கொலை செய்யப்பட்ட சூழலில், விஏஓ சங்கம் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளது. மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் அளிக்கும் புகார் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube