கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு தேடி வரும் “ஹால் டிக்கெட்”

10, 11, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியான நிலையில், தற்பொழுது சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்வர்களின் வீடுகளை தேடி ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஜூன் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, 11-ல் 11 ஆம் வகுப்பு மற்றும் 18-ல் 12 ஆம் வகுப்பு நிலுவைத் தேர்வுகள் தொடங்கும் நிலையில், பொதுத்தேர்வு ஏழுதும் 10, 11, +2 மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற வளையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நாளை பிற்பகல் முதல் பள்ளிதலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால், கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்வர்களின் வீடுகளை தேடி ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, வெளியூரிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் வீடு தேடி சென்று வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.