தடையை மீறி நடத்தப்பட்ட காஞ்சிபுர வேல் யாத்திரையில் இன்று கைது செய்யப்பட்ட எச்.ராஜா!

தடையை மீறி நடத்தப்பட்ட காஞ்சிபுர வேல் யாத்திரையில் இன்று  எச்.ராஜா மற்றும் அவருடன் இருந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பா.ஜா.க சார்பில் தமிழகத்தில் நடத்தப்படவியருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இடங்களில் பாஜகவினர் அத்து மீறி வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர். தடையை மீறி நடத்தப்படக்கூடிய இந்த வேல் யாத்திரையில் கலந்துகொள்பவர்களை தடுக்க போலீசாரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் எச்.ராஜா அவர்கள் தலைமையில் இன்று காஞ்சிபுரத்தில் வேல் யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. அங்கு அவர் உரையாற்றியுள்ளார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் எச்.ராஜா மற்றும் அவருடன் இருந்த தொண்டர்களை கைது செய்துள்ளதாக எச்.ராஜா அவர்களே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal