காஷ்மீரில் தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச்சூடு

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டம் ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பாதுகாப்புப் படையினர் பதிலடிக் கொடுத்தனர். இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்ப்டடனர்.இதனிடையே, சம்பா பகுதியில் ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏகே 47 துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment