காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சண்டை – ஒருவர் பலி!

காபூல் விமான நிலையத்தில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும், அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானை விட்டு பல ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் காபூல் விமான நிலையத்தில் அதிகளவிலான மக்கள் குவிந்து வருவதால், அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதுவரை காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் துப்பாக்கிச்சூடு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அண்மையில் தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே, அப்பகுதியில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக தலிபான்கள், ஆப்கான் பாதுகாப்பு படை மற்றும் வெளிநாட்டுப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காபூல் விமான நிலையத்தில் வடக்கு நுழைவாயிலில் மர்ம நபர்கள் மற்றும் ஆப்கான் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சண்டையில் ஆப்கான் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மோதலில் அமெரிக்கா மற்றும் ஜெர்மன் படையினரும் ஈடுபட்டதாகவும் ஆனால் ஜெர்மனி வீரர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஜெர்மன் முப்படை தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

செல்வராகவன் கெட்டவார்த்தை போட்டு திட்டி விரட்டிட்டாரு! பாவா லட்சுமணன் வேதனை!

Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…

6 mins ago

மக்களே கவனம்!! தமிழகத்தில் வெப்ப அலை வீசும்…மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…

10 mins ago

320-ஐ எட்டியது சர்க்கரை அளவு…சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி.!

Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…

1 hour ago

வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடனும்! தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா பேச்சு!

Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…

1 hour ago

கணவர் இல்லாத உலகில் நான் இருக்க மாட்டேன்… ஆணவ கொலையால் பறிபோன இன்னொரு உயிர்.!

Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு.  அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…

2 hours ago

தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி…

2 hours ago