#BREAKING: குஜராத் மருத்துவமனை தீ விபத்து.. பிரதமர் நிதியுதவி அறிவிப்பு.!

மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் பிரதமர் அறிவிப்பு.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.  மேலும், நிலைமை குறித்து முதல்வர் விஜய் ரூபானி மற்றும் மேயரிடம் பிரதமர் கேட்டறிந்தார்.

இந்நிலையில், மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய்  பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan