குஜராத் :ராஜ்கோட் மத்திய சிறையில் உள்ள 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.!

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் உள்ள 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மத்திய சிறையில் மொத்தமாக 1,386 கைதிகள் உள்ள நிலையில், அதிலுள்ள 94 கைதிகளுக்கு இரண்டாம் கட்டமாக கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சனிக்கிழமையன்று இரவு 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய சிறை கண்காணிப்பாளர் பன்னோ ஜோஷி,

சிறையில் இரண்டாம் கட்டமாக செய்யப்பட்ட பரிசோதனையில் 23 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அறிகுற்றவர்களை சிறையினில் தனிமைப்படுத்த உள்ளதாகவும், மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் அறிவித்தார். ஏற்கனவே சிறையில் உள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.