குஜராத்: கார் ஒன்று லாரியில் மோதி 5 பேர் பலி..!

குஜராத்தில் உள்ள மோர்பியில் கார் ஒன்று லாரியில் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மோர்பி-மாலியா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்ப்டி கிராமத்தின் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதாகவும் கார் டிரைவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராதிகா பாரி கூறியுள்ளார்.

மாலியாவிலிருந்து மோர்பி நகரை நோக்கி ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து மோர்பி தாலுகாவில் உள்ள காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் ஆனந்த் ஷெகாவத், தாரசந்த் பராலா, அசோக் பிலெடா, விஜேந்திர சிங் மற்றும் பவன் மிஸ்திரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், காரை ஓட்டியவர் யார் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.