தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!

தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்!

தாடி வளர்த்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் அந்த மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட தாடி வைத்து அந்த தாடி உடனே வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங்  இவரை திடீரென சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட காவலர் விதிமுறைகளை மீறி உரிய அனுமதியின்றி தாடி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாடி வளர்க்க கூடாது என்பது விதி முறை. பல முறை அறிவித்தும் இவர் தாடியை எடுக்காததால், இந்தசர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளதாக அபிஷேக் சிங் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து இந்தசர் அலி கூறுகையில், ‘1994 ஆம் ஆண்டு கான்ஸ்டபிளாக வேலை பார்த்தேன். அப்போது லேசான தாடி இருந்தது. அதற்கு பிறகும் தாடி வைத்து வருகிறேன். நான் எத்தனையோ இடத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தது இல்லை. இந்த தாடி சம்பந்தமாக நான் பலமுறை அனுமதி கேட்டு. கடிதம் அனுப்பி இருந்தேன் ஆனாலும் அதில் ஒன்றுக்கும் இதுவரை பதில் வரவில்லை.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube