குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு – 2 அரசு பணியாளர்கள் கைது

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு – 2 அரசு பணியாளர்கள் கைது

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 2 அரசு பணியாளர்களை கைது செய்தது சிபிசிஐடி போலீசார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 எழுத்து தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர்கள், அரசு ஊழியர்கள் உட்பட உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதுபோல குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 அரசு பணியாளர்களை கைது செய்தது சிபிசிஐடி போலீசார். கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.2017-ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 ஏ தேர்வில் இருவரும் முறைகேடாக தேர்ச்சிபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரூப்-2ஏ  மற்றும் குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 30-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

Join our channel google news Youtube