#BREAKING: குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு..!

குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

குரூப்-1 தேர்வு கடந்த ஆண்டு ஏப்.5-ம் தேதி நடைபெற்றிருந்தது. கொரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர், ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 3-ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. உதவி ஆட்சியர் , துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 இடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. ஒரு பதவிக்கு 50 பேர் வீதம் முதல் நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan