பச்சை நிறமே பச்சை நிறமே..விழிப்புணர்வில் கோலி படை!

ஐபிஎல்2020 திருவிழா அமீரகத்தில் கலைக்கட்டி வருகிறது. இத்தொடரில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் விளையாடி வருகிறது.

இந்நிலையில் பெங்களூரு அணியானது  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.என்ன விழிப்புணர்வா??

உலகம் பசுமையாகவும்,தூய்மையாக வைத்திருப்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு அணி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம்.

அதே போல இந்தாண்டு நாளை சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுரூ அணி வீரகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.

இந்த விழிப்புணர்வு குறித்து RCB தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha