ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்த காமராஜர் பேத்தி…!

ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்த காமராஜர் பேத்தி…!

காமராஜர் பேத்தி மயூரி கண்ணன், ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்ற்னர்.  இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில்  போட்டியிட விரும்புவோர், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ம் தேதி வரை கொடுக்கப்படும் விருப்ப மனுவை பெற்று விண்ணப்பிக்கலாம் என திமுக தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி,இதுவரை 4,384 விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காமராஜர் பேத்தி மயூரி கண்ணன், ஆர்கே நகரில் திமுக சார்பில் போட்டியிட மனு அளித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், ‘ஏற்கனவே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும், இந்த முறை வாய்ப்பு கிடைத்தால் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube