இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடைபெறாது.! தமிழக அரசு அறிவிப்பு

ஆகஸ்ட் 15-ல் நடைபெறும் கிராம சபை கூட்டம் கொரோனா காரணமாக இந்தாண்டு நடைபெறாது.

ஆகஸ்ட் 15-ம் தேதி வழக்கம்போல நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறும். இந்நிலையில், தற்போது கொரோனா தாக்கம்அதிகரித்து வருவதால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என கருதி இந்தாண்டு  கிராம சபை கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் ஊராட்சியின் செலவுகள், திட்ட பணிகள் போன்றவை குறித்து ஆலோசனை நடைபெறும் . வழக்கமாக குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று  கிராமசபை கூட்டம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan