பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தந்தால் ஊழலும் அநீதியும்தான் வரும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், பொருளாதார ரீதியிலான 10% இட ஒதுக்கீட்டின் மூலம், ஊழல் ஏற்படவும், சமூக நீதி மறுக்கப்படவும் வாய்ப்புள்ளது.பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தந்தால் ஊழலும் அநீதியும்தான் வரும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு ஆகும்.சமூக நீதிக்காகதான் இடஒதுக்கீடு வேண்டும். திசை திருப்புவதற்காகவே பொருளாதாரஅளவில் இட ஒதுக்கீடு10% இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையிலும் எதிர்ப்போம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.