தமிழ்நாட்டில் குட்கா விற்பனையை தடுக்க குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு ..!

குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டதை உறுதி செய்திட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா பொருள்கள் உற்பத்தி, விற்பனைக்கு தடை செய்யப்பட்டதை உறுதி செய்ய குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளச் சந்தையில் விற்கப்படும் குட்கா பொருட்கள் விற்பனையை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான 10 பேர் கொண்ட குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

குட்கா விற்பனை தொடர்பாக 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் புகார் அளிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan