ஓட்டல்கள், பார்களில் மதுபானங்களை விற்க கர்நாடக அரசு அனுமதி

கிளப், ஓட்டல்கள், பார்களில் மே 17 -ம் தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த மே 17-ம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு, சில தளர்வுகளையும் அறிவித்தது. இதைத்தொடந்து பல மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

மதுபானக் கடை திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. மதுக்கடைகளில் மதுபிரியர்கள் சமூகஇடைவெளியை கடைபிடிப்பதில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆன்லைன் மூலம் மதுபான விற்பனையை நடத்த பரிசீலிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகள் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. இதையடுத்து கிளப், ஓட்டல்கள், பார்களில் மே 17 -ம் தேதி வரை மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்து உள்ளது.

 

author avatar
Dinasuvadu desk