அரசு பணமல்ல என் பணம்.! ராமர் கோவில் கட்டுவதற்காக ரூ.1 கோடி தருவதாக அறிவித்த மகாராஷ்டிர முதல்வர்.!

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராம் ஜன்மபூமி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி தருவதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இந்த நன்கொடை பணம் தாக்கரேவின் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணம் என்றும், அரசாங்க பணம் இல்லையென்றும் அவர் ஒரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதிவியேற்று 100 நாட்கள் ஆன நிலையில், நினைவுகூரும் வகையில் தனது மகன் ஆதித்யாவுடன் அயோத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்