#BREAKING: அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி..!

  • கொரோனாவால் உயிரிழக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது.
  • மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவையை சார்ந்த பூமிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்கு தொடுத்தார்கள். இறந்தவர்களின் உடல்கள் இறுதி சடங்கு செய்ய நிவாரணம் வழங்க வேண்டும், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோவை பகுதியில் கொரோனா பரவல் குறையாமல் உள்ளது. இதனால் கூடுதல் மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த இரண்டு அறிக்கைகளும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணை வந்தது. அப்போது, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம். அரசின் கொள்கை முடிவு குறித்த பொதுநல வழக்குகளில் சில விளம்பரத்திற்காக தரப்படுகின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகள் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் உயிரிழக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

author avatar
murugan