4 டயர்களுடன் இயங்கும் அரசு பேருந்து! பொதுமக்கள் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து நேற்று திருப்பூருக்கு சென்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று ஆறு டயர்களுக்கு பதிலாக நான்கு டயர்களுடன் இயங்கியுள்ளது.

இதனையடுத்து, அந்த பேருந்துக்கு பின்னால் காரில் சென்ற ஒருவர் அதனை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/thangavel.subramaniam.71/videos/915052598840225/
பொதுமக்களை ஏற்றி செல்லும் அரசு பேருந்துகள், கவனமற்ற முறையில் இயக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.