#BREAKING : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 புதிய உறுப்பினர்களை நியமித்து அரசாணை வெளியீடு…!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் அருள்மதி, ராஜ் மரியசூசை ஆகிய நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ள 4 உறுப்பினர்களும், உறுப்பினர்களாக பொறுப்பேற்ற நாள் முதல் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.